(உண்மை சம்பவம் என்பதனால் பெயர்களும் இடமும் மாற்றப்பட்டுள்ளது)
1997ம் வருடம். செல் போன் வராத காலம். சென்னையின் மிக பிரபலமான ஒரு பகுதி. குறைந்த வருமானம் கொண்டோருக்காக, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட, மிகவும் ஜனத்தொகை நெருக்கமான ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வருமே அதுமாதிரி)
ஒரு அடுக்கில் 4 தளங்கள். தரைதளம் மற்றும் மூன்று மாடிகள். ஒரு மாடியில் 4 பிளாட்டுகள், 4 மாடியும் சேர்த்தால் 16 பிளாட்டுகள். ஒட்டு மொத்த குடியிருப்பில் ஏறக்குறைய 2500 வீடுகள் இருக்கும்.
அதில் ஒரு குடியிருப்பில் முதல் மாடியில் 8ம் நம்பர் பிளாட்டில் தனியாக தங்கி எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வரும் பேச்சிலர்
ஜெய் வயது 22.
காலையில 5:30க்கு எழுந்து தண்ணி பிடிக்க லைன்ல நின்னாதான் 8 மணிக்குள்ள எல்லா வேலையும் முடிச்சி 8:30க்கு பஸ் புடிச்சி 9:30க்கு அம்பத்தூர்ல இருக்க கம்பனிக்கு போய் சேர முடியும். சூப்பர்வைய்சர் ஒரு முசுடு.
அதி காலை 5:30க்கு அடித்த அலாரத்தை ஆப் பண்ணி விட்டு எழுந்து பாத்ரூம் போய் மூஞ்சி கழுவிட்டு 2 குடத்தையும் எடுத்துக்கொண்டு எதிர் ப்ளாக் அருகே இருக்கும் கார்ப்பரேஷன் அடி குழாய்க்கு போய் வரிசையில் நின்றான்.
இன்னும் தூக்கம் கலையவில்லை. ஒரு 7 – 8 பேர் வரிசையில் அவனுக்கு முன்னாடி இருந்தனர். சிறிது நேரத்தில் இவன் முறை வந்தது. குடத்தை வைத்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது. எதிர் ப்ளாக்கில் இருந்து டமால் என்று ஒரு சத்தம். அதை தொடர்ந்து தண்ணீர் குடம் ஒன்று மட மடவென்று மாடி படிகளில் உருண்டு. கீழே ரோட்டில் வந்து விழுந்து. சப்பையாகி நசுங்கி இருந்தது.
வரிசையில் நின்ற எல்லோரும் ஓட, தண்ணி அடித்துக்கொண்டிருந்த ஜெய்யும் ஓடினான். போய் பார்த்தால். எதிர் பிளாக் முதல் மாடி திலகா அக்கா. படியில் தடுக்கி விழுந்து வலது கை எலும்பு முறிவு மாதிரி தெரிந்தது.
எல்லாரும் ஒரே கூச்சல். “யாராச்சும் ஒரு ஆட்டோ பிடிங்கப்பா” ஒருவர் கத்த. ” இதோ வர்றேங்க ” என்று சொல்லி ஜெய் மெயின் கேட் அருகே இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஓடி போய் ஒரு ஆட்டோ பிடித்து வர. ரெண்டு பேர் மெதுவாக அவங்கள ஆட்டோவில் ஏத்தி ஹாஸ்பிடல்க்கு கொண்டு செல்ல.
ஜெய் தண்ணீர் பிடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்து காலை கடன்களை முடித்து விட்டு பஸ். பிடித்து ஆபீஸ் பொய் சேர மணி 9:35. வழக்கம் போல தனது வேலை, மதியம் கேண்டீன் சாப்பாடு, மாலை வீடு.
டையர்டாக பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி சென்றான். கதவை திறக்கும்போது ” தம்பி. ” என்று ஒரு குரல். ஜெய் திரும்பி பார்க்க. எதிர் ப்ளாக்கில் முதல் மாடியிலிருந்து ஒரு வீட்டு ஜன்னல் வழியாக திலகா அக்கா. வலது கையில் மாவு கட்டுடன். “ரொம்ப தேங்க்ஸ் தம்பி.” என்று கூற, இவன் படிக்கட்டில் இறங்கி வந்து பால்கனியில் நின்று ” என்னக்கா.
இப்போ பரவாயில்லையா? ” என்று நலம் விசாரிக்க ” ஓகே தான். எலும்பு பிராக்ச்சர். ஒரு மாசத்துல கட்டு பிரிச்சிடலாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க”. ” ஐ ஆம் சாரிக்கா ” என்று இங்கிருந்தே ஜெய் சொல்ல, பரவாயில்ல தம்பி. காலையில நீங்க தான் ஓடி போய் ஆட்டோ பிடிச்சிட்டு வந்தீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
ரொம்ப தேங்க்ஸ் தம்பி. ” ஐயோ இதுல என்னக்கா இருக்கு. உங்களுக்கு வேற என்ன ஹெல்ப்ன்னாலும் சொல்லுங்க. ஓகே க்கா “. என்று சொல்லிவிட்டு வீட்டை திறந்து உள்ளே சென்று தொம்மென கட்டிலில் விழுந்து அப்படியே தூங்கி போனான்.
திடும் என கண்திறந்து பார்த்தான். பசி வயிற்றை கிள்ளியது. மணி என்ன. இரவு 9:40. எழுந்து ரோட்டு கடைக்கு சென்று 6 இட்லியும் 1 ஆம்லேட்டும் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டு ராஜேஷ்குமார் நாவலை எடுத்து கட்டிலில் அமர்ந்து படித்துக்கொண்டு இருக்கும்போது.
கதவு தட்டும் சத்தம் கேட்க. ஜெய் கதவை திறந்தால். அங்கு மேல் வீட்டு பாடியம்மா. தம்பி எங்க வீட்டுக்கு மட்டும் கரண்ட் வரல தம்பி. கொஞ்சம் பாக்கிறியா? என்று பாவமாக கேட்க. இவன் ” ஒரு நிமிஷம் பாட்டி” என்று சொல்லி விட்டு டெஸ்டர், கட்டிங் பிளேயர், டார்ச் எடுத்துக்கொண்டு கீழே மாடி படிக்கட்டு அடியில் உள்ள மெயின் போர்ட்டுக்கு போய் பார்த்தான். எல்லாம் இத்துப்போன வயர்களும், தொங்கிகிட்டு இருக்கிற மெயின் ஸ்விச்சுகளும்.
பாட்டி உங்க வீடு மீட்டர் எதுன்னு தெரியுமா?. பாட்டி காண்பிக்க. அதில் உள்ள வயர் எரிந்து கருகி போயிருந்தது. அந்த எரிந்து போன பகுதியை கட் பண்ணி வீசிவிட்டு நல்ல வயரை சீவி மாட்டி விட மீட்டர் ஓட ஆரம்பித்தது.
பாட்டி. வீட்டுக்கு போங்க. கரண்ட் வந்திருச்சு என்று கூற கிழவி ” நீ நாலாருப்ப தம்பி ” என்று சொல்லிவிட்டு மேலே போக, இவனும் கிளம்பும்போது.
தரை தளத்தில் இடது புறம் உள்ள முதல் வீட்டின் வாசல் கதவு திறந்து கொண்டு ஸாயிதா பேகம் வெளியே வர.
இதை சற்றும் எதிர் பார்க்காத ஜெய் அவள் மீது மோத.
நிலை குலைந்து இருவரும் கீழே விழுந்து. பின் ஜெய் சுதாரித்துக்கொண்டு அவளுக்கு உதவ.
பர்தா அணிந்து இருந்த அவள் கையை பிடித்து இவன் தூக்க.
அவளது பர்தா வலது கை தோள்ப்பட்டையில் இருந்து ” சர்ர்ர்ர்ர்ரென ” கிழியும் சத்தம் கேட்டது, இவன் பயந்துபோய் கையை எடுக்க.
ஸாயிதா என்ன செய்வதென்று தெரியாமல் டக்கென எழுந்து வீட்டிற்குள் சென்றுவிட. ஜெய்க்கு பகீரென்று தூக்கி வாரி போட்டது.
இன்னைக்கு செத்தோம். என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வேக வேகமாக வீட்டிற்கு சென்று கதவை அடைத்து விட்டு கட்டிலில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.
இதயம் பக். பக் என்று அடித்துக்கொண்டிருந்தது.
ஸாயிதா பேகம். பெயர் மட்டும் தான் தெரியும். எப்போ பாத்தாலும் பர்தா போட்டு மூடிட்டு தான் இருப்பா. முகத்தைப் பார்த்ததில்லை. ஆள் எப்படி இருப்பாள், கருப்பா, சிவப்பா, என்ன வயசு என்று ஒரு தகவலும் தெரியாது. தோராயமாக சொல்லப்போனால் பர்தாவோட பாத்தா கொஞ்சம் பூசின மாதிரி உடம்பு.
இவன் இங்கு குடி வந்த 1 1/2 வருஷத்துல யாரு கிட்டயும் அதிகமா பேசுனது இல்ல. என்னன்னா. என்ன. அவ்வளோதான்.
பயத்துல தூக்கமே வரல. ரொம்ப நேரம் ஆச்சு. மணி பாத்தான். 12:30 கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மணி பாத்தான்அதிகாலை 4:30
சரி மெயின் ரோட்டுக்கு போயி டீ கடை தொறந்திருந்தா. டீ சாப்பிட்டு வருவோம். தண்ணி பிடிக்க டைம் சரியா இருக்கும் என்று கணக்கு போட்டு.
எழுந்து சட்டையை போட்டுக்கிட்டு. டீ கடைக்கு வந்து. டீ சாப்பிட்டுட்டு.
வேக வேகமாக வீட்டிற்கு வந்து குடங்களை எடுத்துக்கொண்டு படியில் கீழே இறங்க. அங்கே.
ஸாயிதா இவனுக்கு முன்னாடி குடத்துடன். குழாய்க்கு சென்று கொண்டிருந்தாள்.
ஜெய்க்கு பகீரென்றது. என்ன பண்ணலாம்.
அவள் இவனை திரும்பி பார்த்துவிட்டு வரிசையில் நிற்பது தெரிந்தது. இவனோடு சேர்த்து மொத்தம் 3 பேர் தான். இப்போ ஓடவும் முடியாது.
கை கால் எல்லாம் நடுங்கிக்கொண்டே நிற்க.
ஸாயிதா தண்ணீர் அடிக்க ஆரம்பித்தாள். அடுத்து இவன் தான். இன்னும் வேறு யாரும் வரலை. அவள் குடத்தை தூக்கிக்கொண்டு செல்ல.
இவனுக்கு மனசுக்குள் நிம்மதி. ஹப்பா. போயிட்டா. இனிமேல் நிம்மதி. என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு தனது இரண்டு குடங்களையும் தண்ணீரோடு தூக்கிக்கொண்டு தனது ப்ளாக்கிற்குள் நுழைய. அங்கே.
இவனை எதிர்பார்த்து ஸாயிதா நின்றுகொண்டிருந்தாள்.
போச்சுடா.
மெதுவாக நடந்து சென்று.
அவளை கடந்து படியில் ஏறும்போது.
“ஒரு நிமிஷம்.” என்று அவள் கூப்பிட.
கருத்து எழுதுங்கள்