உன்னைச் சுடுமோ என் நினைவு -3 (Unnai Sudumo En Ninaivu 3)

இப்போது என்ன செய்வது? அவள் ஏதாவது வம்பை இழுத்து விட்டு விடுவாளோ? இந்த பெண்களை மட்டும் நம்பவே முடியாது. ஆண்களின் ஆசையை தூண்டி விட்டு அவனை வில்லங்கத்தில் சிக்க வைப்பதில் வல்லவர்கள்.. !! உடனே போய் மன்னிப்பு கேட்டு விடுவதே நல்லது.. !!

முடிவு செய்து கண்ணாடி முன் நின்று தலைவாரினான். ஐந்து நிமிடத்தில் ரெடியாகி வெளியே போனான். கதவுக்கு வெளியே போக.. தெரிந்தவர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். தவிர்க்க முடியாமல் அவருடன் பேசிக் கொண்டிருக்க.. கிருத்திகா பேகுடன் தன் வீட்டில் இருந்து வெளியே வந்தாள். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டைப் பூட்டினாள். ஒரு வித ஏக்கத் தவிப்புடன் அவள் உடலின் கவர்ச்சியான வளைவு, நெளிவுகளைப் பார்த்து உள்ளே உஷ்ணமானான். அவள் தலைவாரி ஜடை பிண்ணி மேக்கப் செய்திருந்தாள். வீட்டைப் பூட்டி துப்பட்டாவை சரி செய்து கொண்டு பேகை எடுத்து தோளில் போட்டபடி அவனிடம் வந்தாள்.

“போலாமா?” நிருதி கேட்டான்.

அவன் முகத்தை நேராகப் பார்க்காமல் தலையை ஆட்டினாள். அவள் முகம் இன்னும் இறுகித்தான் இருந்தது. அதில் ஒரு மெலிதான சோகம் இருப்பதைப் போலிருந்தது. அவள் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறாள்.

பேசிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டு அவனும் வீட்டைப் பூட்டிக் கிளம்பினான். மனதை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு பைக்கை எடுத்தான். அவன் பின்னால் ஒரு பக்கம் பார்த்து உட்கார்ந்தாள். அவளை ரியர்வு மிரரில் பார்த்து விட்டு மெதுவாக பைக்கை ஓட்டினான்.

“ஏய்.. வெரி ஸாரி கிருத்து” தலையை திருப்பி சைடில் பார்த்துச் சொன்னான்.

அவள் பேசவே இல்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் சொன்னான்.

“நீ கோபமா இருக்கேனு தெரியுது. என்னை மன்னிச்சிரு”

“…… ”

“ஸாரிப்பா”

“பேசாதிங்க ணா” கோபமாய் சொன்னாள்.

” வெரி ஸாரி”

“ச்ச.. ஏன் அப்படி பண்ணீங்க?”

“……. ”

“நீங்க எவ்ளோ நல்ல அண்ணாவா இருந்தீங்க.. அதை நம்பித்தானே நானும் உங்க கூட பழகினேன்.? சே.. நீங்க இப்படி செய்வீங்கனு நான் கொஞ்சம் கூட நெனைக்கவே இல்ல..” என்று மிகவும் வருந்திச் சொன்னாள்.

அவனுக்கும் வருத்தம் உண்டானது.

“வெரி ஸாரிம்மா” மிகவும் தணிந்த குரலில் சொன்னான்.

“அந்தக்காகிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?”

“நான் பண்ணது தப்புத்தான்.. அதுக்காக மனசார மன்னிப்பு கேக்கறேன். என்னை மன்னிச்சிரு. இதுக்கு மேல உன் விருப்பம்”

அதன்பின் அவன் பேசவில்லை. அவளும் பேசவில்லை. ஆஸ்பத்திரி போய் அவள் அம்மா, அப்பாவைப் பார்த்து பேசிவிட்டு சிறிது நேரத்தில் கிளம்பினான். அவன் கிளம்பி வரும்வரை அவள் பேசவே இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை. அவன் பார்வைகளை அவள் மதிக்கவும் இல்லை.. !!

அவன் விடை பெற்று வெளியேற கிருத்திகா அவன் பின்னால் வந்தாள்.

“ஒரு நிமிசம்” என்றாள்.

வெராண்டாவில் நின்று அவளைப் பார்த்தான். இன்னும் அவள் கூந்தலால் அடி பட்ட அவன் கண் சிவந்துதானிருந்தது. அதைப் பார்த்து கொஞ்சம் வருத்தப் பட்டாள்.

“இனிமே இப்படிலாம் பண்ணாதிங்க”

“ஸாரிமா”

“எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது”

“என்னை அடிச்சிரு”

“அடிச்சா.. ??”

“உன் கோபம் ஆறிடும்”

முறைத்தாள்.

“ம்ம்.. போங்க.. பை” எனச் சொல்லிவிட்டு சட்டென திரும்பிப் போனாள்.. !!

கொஞ்சம் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினான் நிருதி. நடந்ததை நினைக்க அவமானமாகத்தான் இருந்தது. ஆனாலும் இது சபலத்தால் உண்டான ஆசைக்கு கொடுத்த விலை என்று மனதை சமாதானம் செய்தான். நேராக பாருக்குப் போய் பியர் வாங்கி உட்கார்ந்தான். பாதி பியர் குடித்தபின் கிருத்திகாவிடமிருந்து போன் வந்தது. சிறு ஆச்சரியத்துடன் எடுத்தான்.

“ஹலோ?”

“வீட்டுக்கு போயிட்டிங்களா?” அவள் குரல் இறுக்கமாகவே இருந்தது.

“ஏன்ப்பா?”

“எங்கருக்கீங்க? ஒரே சத்தமா இருக்கு?”

“வீட்ல போய் தூங்கணுமில்ல.. அதான் ஒரு பீரு அடிச்சிட்டு போய் நல்லா தூங்கிடலாம்னு”

“பீரா?”

“நல்லா தூக்கம் வரும். ஈவினிங்வரை நல்லா தூங்கலாம்.”

“ஏன் இப்படி பண்றீங்க? நல்ல அண்ணாதானே நீங்க? ”

“……” அவன் பேசவில்லை.

“அலோ.. கேக்குதா?”

“கேக்குது. சொல்லு?”

“இன்னிக்கு நீங்க சுத்தமா செரியில்ல”

“அப்படியா?”

“ஏன் அப்படி செஞ்சீங்க..?”

“என்னது?”

“வீட்ல.. என்னை லிப் கிஸ்ஸடிச்சீங்க. அப்றம் இங்க வந்தும் சும்மா சும்மா என்னைவே பாத்துட்டிருந்தீங்க.. இப்ப பார்ல போய் உக்காந்துட்டு…”

“……….”

“சொல்லுங்க? ”

“என்ன சொல்றது?”

“இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ”

“அதெல்லாம் உனக்கு புரியாது விடு”

“என்ன புரியுது?”

“என் பீலிங்”.

“என்ன பீலிங்?”

“……….”

“ஆஸ்பத்ரினு கூட பாக்காம என்னை திங்கற மாதிரி பாத்திங்க”

“ஏய்.. இல்லப்பா.. நான் அப்படிலாம் பாக்கல”

“நீங்க பாத்திங்க. அதை நான் பாத்தேன்”

“…….”

“பாத்திங்கதான?”

“சரி.. அப்படியே வெச்சுக்கோ”

“ஏன் அப்படி பாத்திங்க என்னை?”

“……..”

“அலோ.. சொல்லுங்க?”

“நீ அழகாருந்த. செம அழகு. அதை ரசிச்சேன்”

“நல்லா சைட்டடிச்சீங்க”
”ஆமா”

“லொள்ளாண்ணா?”

“ஹா ஹா..”

“அக்கா வரட்டும் சொல்றேன். உங்க ஹஸ்பெண்ட் என்னை இழுத்து வெச்சி கிஸ்ஸடிச்சிட்டாருனு”

“…………”

“அலோ.. ணா…”

“ம்ம்”

“சொல்லவா?”

“சொல்லிக்க”

“சொன்னா என்னாகும் தெரியும்ல?”

“என்னாகும்? ரெண்டு நாள் என் கூட சண்டை போடுவா. முடிஞ்சா ஊருல நாலு பேருகிட்ட சொல்லி ஊரைக் கூட்டுவா. என் பேரு மட்டுமில்ல.. இதுல உன் பேரும் சேந்துதான் கெடும்”

“எத்தனை திமிரா பேசுறீங்க..?” கடுப்பாகி கேட்டாள்.

“சொல்லித்தான் பாரேன். என்ன நடக்குதுனு? உனக்கு அவளை பத்தி சரியா தெரியாது. நீ என்னை சிக்க வெக்கறதா நெனச்சு சொன்னேன்னா.. அவ உன் பேரை நாறடிச்சிருவா. இதுல நான் எதுவும் பேச வேண்டியதே இல்ல. எல்லாம் அவளே பாத்துக்குவா”

“என்ன.. என்னை மெரட்டறீங்களா?”

“ஹ்ஹா.. உன்னை மெரட்டலப்பா.. உண்மையை சொல்றேன். என் பொண்டாட்டி எப்படிப் பட்டவனு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவ உன்னை தப்பா சொல்ல மாட்டா. ஆனா என்னை அசிங்கப் படுத்துறதா நெனைச்சு பண்ற காரியத்துல தன்னால உன் பேரும் சேந்து கெடும். நீயும், அவளும் வேணா உண்மையா பேசலாம். ஆனா இந்த ஊரு என்ன பேசும் தெரியுமா? நெருப்பில்லாம பொகையாதுனு பேசுவாங்க. ஊசி எடம் குடுக்காம நூலு நொலையாதும்பாங்க. எல்லாம் நடந்து முடிஞ்சு கடைசில மாட்டற மாதிரி ஆனதும் அந்த ஆளுமேல பழி போட்டுட்டானு பேசிக்குவாங்க. இப்ப சொல்லு.. இது நடக்காதுனு நெனைக்கறியா?”

“……….”

“நானாவது பரவால. கல்யாணம் ஆனவன். நான் அசிங்கப் பட்டாலும் எனக்கு ஒரு அழகான வயசு பொண்ணு கூட டச்சுன்னா அது ஒரு கெத்துதான். ஆனா உன்னை நெனைச்சு பாரு.. உன் ப்யூச்சர்தான் பாதிக்கும்”

“இப்ப என்ன சொல்ல வரீங்க,?”

”ஐ மிஸ் யூ..”

”என்ன..?”

“டேக் கேர்.. பை” சட்டென காலைக் கட் பண்ணி விட்டு மீண்டும் பியரை எடுத்து தொண்டைக்குள் சரித்தான் நிருதி.. !!

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கால் செய்தாள் கிருத்திகா. எடுத்தான்.

“என்னப்பா?”

“என்ன சொன்னீங்க?”

“எப்ப?”

“லாஸ்ட்டா சொன்னீங்கள்ள?”

“தெரியலப்பா.. என்ன சொன்னேன்”.

”லொள்ளா உங்களுக்கு? ”

“சே… இல்லப்பா”

“பின்ன.. என்ன சொன்னேன்னு என்னை கேக்கறீங்க?”

“நான் சொன்னது உனக்கு எப்படி தெரியும்? ”

“என்கிட்டதான சொன்னீங்க?”

“அப்பறம் எதுக்கு மறுபடி என்ன சொன்னீங்னு கேக்கற? ஏன் உனக்கு தெரியாதா?”

“என்ன.. ஓவர் மப்பா?”

“இன்னும் அடிக்கவே இல்ல”

“அப்பறம் ஒரு மாதிரி பேசுறீங்க?”

“அது என் பீலிங்”

“என்ன பீலிங்?”

“விடு. உனக்கு அது புரியாது”

“பரவால சொல்லுங்க”

“ப்ச்.. விடுப்பா..”

“சரி. ஐ மிஸ் யூ னு சொன்னீங்கள்ள.. அதுக்கு என்ன அர்த்தம்? ”

“ஐ மிஸ் யூனுதான் அர்த்தம்”

“ஆஆ.. கடிக்காதிங்க.. நான் ஆல்ரெடி உங்க மேல மசக் கடுப்புல இருக்கேன்”

“ஓகே பை”

“இருங்க”

“என்ன? ”

“குடிக்காம வீட்டுக்கு போங்க”

“ஏன்?”

“நீங்க குடிக்கறது எனக்கு புடிக்கல”

“உனக்கு ஏன் புடிக்கணும்?”

“எனக்கு குடிக்கறவங்களை புடிக்காது”

“சரி.. உனக்கு புடிக்கலேன்னா நான் ஏன் குடிக்காம இருக்கணும்.? எனக்கு குடிக்கறது புடிச்சிருக்கு. குடிச்சிட்டு போனாத்தான் நிம்மதியா தூங்குவேன்”

“என்னமோ பண்ணி தொலைங்க..”

“ஓகே தேங்க்ஸ்”

” அலோ..”

“ம்ம்?”

“அதுக்கு என்ன மீனிங்?”

“எதுக்கு? ”

“ஐ மிஸ் யூ சொன்னீங்கள்ள..?”

“மிஸ் யூ னுதான் அர்த்தம்ப்பா”

“வந்தன்னா தொலைச்சிருவேன் பாத்துக்கோங்க”.

“அப்படியா.. ? வாயேன்.. !!”

“என்ன.. என்னை லவ் பண்றீங்களா?”

”அதுக்கு பேரு லவ்வா?”

“உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்டாட்டியும், ரெண்டு பசங்களும் இருக்காங்க.. ஞாபகமிருக்கா?”

“அப்படியா.. அய்யய்யோ… சொல்லவே இல்ல.”

“ச்சீ வெய்ங்க..” சட்டென காலை கட் பண்ணி விட்டாள் கிருத்திகா.. !!

கருத்து எழுதுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டுள்ளன.