Vappatigal Pola Ragasiyama Vazha Virupam Illai
என் நண்பன் கெளதம் வெளிநாட்டிற்கு சென்று படித்து அங்கேயே ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டான். அவனைத் தேடி அவன் வீட்டிற்கு போன போது தான் அவனோட அக்கா காவேரி எனக்கு பழக்கம். தம்பி கெளதமோட திருமணத்தில் காவேரி அக்காவுக்கு அதில் வருத்தம் இருந்தாலும் அவன் விருப்பத்துக்கு தடை சொல்ல வில்லை. ஆனால் குறைந்த பட்சம் அவன் கல்யாணத் தகவலை கூட வீட்டில் தெரிவிக்க வில்லை.
மூத்தவள் என்கிற முறையில் ஆசீர்வாதம் வாங்க கூட வரவில்லை என்பது அவள் ஆதங்கம். அந்த சமயத்தில் நான் காவேரி அக்காவின் பக்கம் நின்று நண்பனோடு சண்டை போட்டு அக்காவின் பக்கம் உள்ள நியாயத்தை பேசி விவாதம் செய்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னோடு பேசுவதையும் நிறுத்தி, தொடர்பையும் துண்டித்து கொண்டான். ஆனால் நான் தொடர்ந்து காவேரி அக்காவோடு தொடர்பில் தான் இருந்தேன். அவ்வப் போது போய் ஆறுதல் சொல்வேன்.
அறியாத வயசுல அப்பா விட்டுட்டு போனாரு, கூடப்பி றந்தவனும் விட்டுட்டு போயிட்டான். நீ ஆவது கூட இருக்கியேடா அது போதும் என்பாள். அக்கா கல்லூரியில் சேர்ந்த போதே அவங்க அப்பா இறந்து போனார். குடும்ப பொறுப்பை சுமந்து தம்பியை செட்டில் பண்ணிவிட்டு நிமிரும் போதே காவேரி அக்காவோட கல்யாண வயது தாண்டி விட்டது.
ஆனால் அவள் விரும்பி இருந்தால் குடும்பத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால் தம்பியோட துரோகத்தால் கொஞ்சம் உடைந்து போய் தான் இருந்தாள். எல்லா பாரத்தையும் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டால் அவள் மனசும், உடலும் கஷ்டப்படும் என்று அம்மாவிடம் கூட தம்பியின் கல்யாண விஷயத்தை அக்கா சொல்ல வில்லை.
அதற்கு பிறகு அக்கா தனிமை பட்டாலும் துணிச்சலோடு தன் வக்கீல் தொழிலை திறம்பட நடத்திக் கொண்டு இருந்தாள். இந்த நிலையில் என் திருமணம் நடை பெற்றது. அக்கா வந்து வாழ்த்திச் சென்றாள். ஒரு நாள் எங்களை வீட்டிற்கே அழைத்து விருந்து வைத்தாள். ஆனால் விதி என் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்க, துணைவியோடு சண்டை, சச்சரவு என்று என் அன்றாட வாழ்க்கையில் நிம்மதி போனது. இடையில் காவேரி அக்காவை நானும் மறந்து விட அவளும் பிஸியில் சட்ட வேலைகளை கவனித்து கொண்டு இருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து விட்டு வாழ்க்கையை கடந்து போய் கொண்டு இருந்த போது தான் என்னை விட்டு பிரிந்து போன மனைவி விவாகரத்து கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தாள்.
அதை நானே கூட எதிர்பார்க்கவில்லை. இனி சேர்ந்து வாழ முடியாது என்று தோன்றினாலும் காலம் சில இடை வெளியில் சில மனங்களை மாற்றி, காயங்களை ஆற்றக் கூடிய மருத்துவ குணம் வாய்ந்தது. காலம் வரும் போது பார்க்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் எல்லாம் கை மீறிப் போய் விட, வக்கீல் நோட்டீஸை எடுத்துக் கொண்டு காவேரி அக்காவை பார்க்க ஓடினேன்.
அப்போது தான் நானும் என் வீட்டில் என் மனைவியோடு நடந்த சம்பவங்களை ஓட்டிப் பார்த்தேன். எப்போ பார்த்தாலும் போனும் கையுமாக இருப்பதை பார்த்து அதில் ஆரம்பித்த பிரச்சனை தான் விவாதமாகி, சூடான வாக்கு வாதம் ஆகி தொடர்ந்து உறவு விரிசல் ஆகி விட்டது. ஆனால் திருமணத்திற்கு முன்பே என்னிடம் சொல்லித் தொலைத்து இருந்தால் நானே அவளை அவள் காதலனோடு வழி
D
னுப்பி வைத்து இருப்பேன். தேவை இல்லாமல் என் வீட்டார் நிம்மதியையும் நாசப் படுத்தி விட்டு போய் விட்டாள்.
நல்ல
வேளை குழந்தை குட்டி என்ற உறவு முளைப்பதற்கு முன்பே குடும்ப வேரை வெட்டி விட்டாள். இல்லை என்றால் அந்த பிஞ்சு வாழ்க்கையும் பாழ் பட்டு ருக்கும். காவேரி அக்காவின் சட்ட வழிகாட்டல் படி விவாகரத்து பெற்று விட்டு நானும் சட்டப் படிப்பை முடித்து விட்டு அக்காவிடம் உதவியாளராக சேர்ந்தேன். இருவரும் ரொம்ப பிஸி ஆனோம். செய்யும் சட்டத் தொழிலில் கவனம் இருந்ததால் வாழ்க்கையின் காயங்கள் எல்லாம் மறந்து இருவரும் கவலையை மறந்து மகிழ்வான மன நிலையோடு வாழ ஆரம்பித்தோம்.
அப்போது நான் முழு நேரமும் அக்காவோடு தான் இருந்தேன். வீட்டிலும் எனக்கு ஆறுதல் தேவை என்பதால் என்னை அக்காவோடு தங்கச் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பி சென்றார்கள். பல இலவச சட்ட உதவிகளைச் செய்து பேரும் புகழும் அடைந்தாலும் நான் கோர்ட்டில் காவேரியை அக்கா என்று தான் அழைப்பேன். ஆனால் ஊர் வாயை மூட முடியும் ஜோடி வக்கீல் என்று எங்களை கிண்டல் கேலி பேசினார்கள். நான் அக்காவோட இமேஜ் பாதிப்பதை பற்றி கவலைப் பட்டேன். அக்கா சிரித்து
கருத்து எழுதுங்கள்