உடல் பயிற்சி செய்ய அதிகாலையிலேயே எழுந்துகொண்டேன். டி-ஷர்ட், ஷாட்ர்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டேன். மாடியில் இருந்த என் ரூமை விட்டு கீழே இறங்கி, ஹாலுக்கு வந்தேன். அம்மா கொண்டு வந்து தந்த காபியை உறிஞ்சிக்கொண்டே, அண்ணிக்காக ரம்யாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
அண்ணி ரம்யா அவள் அறையில் இருந்து வெளிப்பட்டாள். அவளும் ஒரு பிங்க் நிற டி-ஷர்ட்டும், ஷார்ட்சும் அணிந்திருந்தாள். கூந்தலை குதிரை வால் மாதிரி தொங்கவிட்டு, ஹேர் பேன்ட் போட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள். எனக்கு அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டே கேட்டாள்.
“சிவா, ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா. ?”
“இல்லை அண்ணி. இப்போதான் வந்தேன். ”
“ம்ம். நல்லா தூங்கினாய ?. 2 நிமிடம்
நான் ரெடியாகிடுவேன். ”
சொல்லியபடி ஷூவை மாட்டிக்கொள்ளும் அண்ணியையே நான் பார்த்தேன். எவ்வளவு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள். ? நயன்தாரா போல வட்டமுகமும், பளிங்கு குண்டுகள் போல கண்களும், கூர்மையான நாசியும், செதுக்கி வைத்தாற்போல சிவந்த அதரங்களும், ஆப்பிள் துண்டுகள் போல கன்னங்களும். அசத்தும் அழகு மட்டும் இல்லை. எவ்வளவு அன்பான, அடக்கமான குணம் இவளுக்கு. ? இதுவரை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசியதில்லையே. ? எத்தனை பேருக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைய கொடுத்து வைத்திருக்கும். ? ஆனால். ஆனால். இவளைப்போய் அண்ணன் பிடிக்கவில்லை என்கிறானே. ? அறிவில்லாதவன். எனக்கு அண்ணன் மேல் லேசாக ஒரு எரிச்சல் வந்தது.
நானும் என் அண்ணனும் இரட்டை பிறவி. என்னை விட 10 நிமிடம் முன்னே பிறந்தவன். பெயர் ராம். எல்லாவற்றிலும் எனக்கு முன்னாடியிருப்பான். படிப்பில் புலி. நான் சுமார். அண்ணன் படிக்கும் போதே TV யில் ஜாக்கியாக வேலை பார்க்கிறான். கைநிறைய சம்பளம். நான் இன்னும் அரியர்ஸ் முடிக்கவில்லை. வெளியில் படித்துக்கொண்டியிருக்கேன். அண்ணி வசதியான வீட்டு பெண். அண்ணனை பார்த்து பிடித்துப்போய், முறைப்படி பெற்றோர்கள் பேசி முடிவு பண்ணி கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.
“காபியை முடிச்சுட்டியா சிவா. ? கெளம்பலாமா. ?” அண்ணி எழுந்துகொண்டே கேட்க, நான் கவனம் கலைந்தேன்.
“ம்ம். கெளம்பலாம் அண்ணி. ”
நானும் எழுந்து கொண்டேன். இருவரும் கிளம்ப தயாரானபோது அம்மா உள்ளே இருந்து வந்தாள்.
“சீக்கிரம் வந்திருங்கப்பா. ரொம்ப நேரம் ஓடிட்டு இருக்காதீங்க. ”
“ம்ம். சரிம்மா. ”
நானும் அண்ணியும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். நான் என் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அண்ணி பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள். என் இடுப்பில் கைபோட்டுக் கொண்டாள். நான் ஆக்சிலரேட்டரை திருக, வண்டி பறக்க ஆரம்பித்தது. வண்டி முன்னால் செல்ல செல்ல, எனது ஞாபகம் பின்னால் சென்றது.
அண்ணிக்கும், அண்ணனுக்கும் ஆறு மாதங்கள் முன்னால்தான் திருமணம் ஆனது. அண்ணன் TV நிலையத்தில் இரவு சிப்டில் இருக்கிறான். சினிமா கம்பெனியில் பார்ட் டைம் வேலை பார்க்கிறான். மீடியா, சினிமா என்று கலை வெறியுடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். ஒரு வருடம் முன்பு அம்மா அண்ணனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தாள். அண்ணன் நிறைய கண்டிஷன் போட்டான். தனக்கு மனைவியாக வரப்போகிறவள் எப்படி இருக்க வேண்டும் என்று அம்மாவுக்கு ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்தான்.
அண்ணின் அப்பா நேரில் வந்து அண்ணனுக்கு கேட்டு, அண்ணியின் போட்டோவை குடுத்தார். போட்டோவில் பார்த்த அம்மாவுக்கு ரம்யா அண்ணியை ரொம்ப பிடித்து போய் விட்டது. அழகான, அடக்கமான, அன்பான என் அண்ணியை யாருக்குத்தான் பிடிக்காது. ? என் அண்ணனை தவிர. ஆனால் அண்ணியிடம் அண்ணன் எதிர்பார்த்த சில தகுதிகள் இல்லை. அண்ணனுக்கு பாட, நடனம், தமிழ் நன்கு மேடையில் பேசத்தெரிந்த பெண் வேண்டும் என்று கேட்டான். ஆனால் அண்ணி கூச்ச சுபாவம், மேடை தமிழ் பேச வராது. அண்ணிக்கு பாட பேசத் தெரிந்தாலும், அண்ணன் எதிர்பார்த்த அளவுக்கு சரளமாக வரவில்லை.
சினிமா, TV, கலை, இலக்கியம் பற்றிய அடிப்படை அறிவு இருந்தாலும், அண்ணன் எதிர்பார்த்த மாதிரி அண்ணி அதில் எக்ஸ்பெர்ட் இல்லை. தனக்கு நிகராக இலக்கியம், கலை பற்றி பேசும் பெண் வேண்டும் என்றான் அண்ணன். ஆனால் அண்ணிக்கு ஆங்கில மிடியாவில் படித்ததால் அப்படி ஒரு விஷயம் இருப்பதே இப்போது நான் சொல்லித்தான் தெரியும். அப்புறம் அவளுடைய இடுப்பில் இருந்த சின்ன மடிப்பு. கவர்ச்சியாக இருந்தாலும், அண்ணனுக்கு அந்த மடிப்பை பிடிக்கவில்லை. அவனுக்கு மனைவியின் உடம்பு சிக்கென்று இருக்க வேண்டும்.
அம்மாவுக்கு வலிய வந்த பணக்கார வரனை விட்டுவிட மனம் வரவில்லை. அண்ணனிடம் நிறைய பொய் சொல்லி, கல்யாணத்தை நடத்தி முடித்தாள். கல்யாணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டாள். அண்ணனுக்கு அம்மா சொன்ன பொய் எல்லாம் முதலிரவு அன்றே தெரிந்து போனது. அடுத்த நாளே அண்ணியை இங்கே விட்டுவிட்டு TV நிலையம், சினிமா கம்பனி என்று போய்விட்டான். அண்ணியுடன் வாழமுடியாது என்று இரண்டு நாள் கடிதம் எழுதி தந்தான். அண்ணியின் அப்பாவும், அம்மாவும் பதறிப் போனார்கள். அம்மா அவர்களுக்கு சமாதானம் சொன்னாள். அண்ணியை அண்ணனுடன் வாழ வைப்பதாக உறுதியளித்தாள். அப்புறம் அம்மா என்னுடைய உதவியை நாடினாள். அண்ணனுக்கு பிடித்தமாதிரி அண்ணியை மாற்றி அவளை கலை,தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சியடைய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். நானும் சவாலாக எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தேன்.
அண்ணிக்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுத்து, அவளுடைய உடம்பை ஷேப்பாக மாற்றுவதுதான் எனது மிக முக்கியமான வேலை. காலையும், மாலையும் ஜாகிங், எக்சர்சைஸ். அப்புறம் வாரத்திற்கு இரண்டு நாள் ஸ்விம்மிங் கிளாஸ். அதில்லாமல் அண்ணியை தமிழ், நடன க்ளாசுக்கும், நாடக பட்டிமன்ற க்ளாசுக்கும் அழைத்து சென்று, திரும்ப கூட்டி வருவதும் அன்றாட வேலை. அம்மாவின் அனுமதியுடனே அண்ணியை இரண்டு மூன்று முறை அழகு நிலையத்துக்கு அழைத்து சென்று, அந்த சூழ்நிலையை அவளுக்கு பழக்கமாக்கினேன். பேசன் மாடல் கலையை அண்ணிக்கு கற்றுக் கொடுத்தேன். அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனுக்கு பிடித்த மாதிரி மாறிக் கொண்டிருக்கிறாள்.
இந்த ஆறு மாதத்தில் நானும் அண்ணியும் நல்ல நண்பர்களாக மாறிப் போனோம். அண்ணி,” எனக்கு உன்னையும் உன் அண்ணன் ராமையும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கு. உன்னை முதலில் பார்த்துயிருந்தால் உன்னை தான் கல்யாணம் பண்ணியிருப்பேன். உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் “ என்றாள்.
அண்ணி சொன்னது எனக்கு ரொம்பவே பிடித்து போனது. இவளை விட நல்ல பெண் அண்ணனுக்கு கிடைக்கமாட்டாள் என நான் உறுதியாக நம்பினேன்.
அண்ணியும் என் மேல் அன்பை பொழிந்தாள். அவளுக்காக. புருஷனுடன் அவள் சந்தோஷமாக இருப்பதற்காக. நான் நிறைய முயற்சி எடுத்துக்கொண்டு கஷ்டப்படுவதால், அண்ணிக்கு என்மேல் ஒரு தனிப்ரியம் வந்திருந்தது. ஆனால் சில நாட்களாக அண்ணியின் அந்த ப்ரியம் எனக்குள் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அவ அழகு என்னை என்ன மோ பண்ணி, தூக்கத்தை கெடுகிறது. அண்ணி கூடிய சீக்கிரம் அண்ணனுடன் சென்றுவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஒரு பத்து நிமிடத்தில் அந்த பார்க் வந்தது. வண்டியை வெளியே நிறுத்திவிட்டு நானும், அண்ணியும் பார்க்குக்குள் நுழைந்தோம். பார்க்கின் உட்புறமாக இருந்த அந்த பெரிய வட்ட சாலையில் ஓட ஆரம்பித்தோம். அந்த அதிகாலை நேரத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிருவரை தவிர அந்த பார்க் மிக அமைதியாக, ஆள் நடமாட்டமில்லாமல் இருந்தது. நான் அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஓடினேன். அண்ணி மிகவும் என்ஜாய் பண்ணி ஜாகிங் செய்தாள். ஆறுமாதத்தில் அண்ணி ரொம்ப தேறி விட்டாள். எனக்கு இணையாக அந்த பார்க்கை எட்டு ரவுண்டு அசால்ட்டாக அடிக்கிறாள். என்னுடய ட்ரைனிங் என்று எனக்கு கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது.
ஒரு பத்து நிமிடம் ஓடி முடித்ததும் அண்ணி களைத்து போய் அந்த மரப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். நானும் அண்ணிக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டேன். அண்ணி வாட்டர்கேனை திறந்து தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள். நான் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தேன். அண்ணியின் தொண்டைக்குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்குவது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அப்புறம் அவளுடைய மூச்சிரைப்புக்கு தகுந்த மாதிரி விரிந்து சுருங்கும் அவளுடைய மார்புகள்.
“என்ன அசோக். என்னையே அப்படி பாக்குற. ?” அண்ணி கேட்க, நான் பார்வையை விலக்கிக் கொண்டேன்.
“அ. அ. அது. ஒன்னும் இல்லை அண்ணி. சும்மா. நெனச்சு பார்த்தேன். இப்போ நீங்க நல்லா இளைச்சுட்டீங்க அண்ணி. உங்க உடம்பு நல்லா ட்ரிம்மா மாறிடுச்சு. ”
“ம்ம்ம். எல்லாம் உன் ட்ரைனிங்தான். என்னாலேயே நம்ப முடியலை. பாரு. கல்யாணத்துக்கு முன்னால இடுப்புல இருந்த டயர். இப்போ போன இடமே தெரியலை. ”
சொன்னவாறே அண்ணி தன் டி-ஷர்ட்டை லேசாக மேலே தூக்கி தன் இடுப்பை காட்டினாள். கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா சதை இல்லாமல் அண்ணியின் இடுப்பு குழைவாக உள்ளடங்கி போய் இருந்தது. எலுமிச்சையும், சந்தனமும் கலந்த கலரில் பளிச்சென்று மின்னியது. அண்ணியை அந்த போஸில் பார்க்க மிக செக்ஸியாக இருந்தாள். எனக்கு மூளைக்குள் சில தப்பான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்க, நான் பட்டென்று என் பார்வையை விலக்கிக் கொண்டேன். பேச்சை மாற்றும் எண்ணத்துடன் கேட்டேன்.
“வெய்ட் செக் பண்ணினீங்களா அண்ணி. ?”
“ம்ம். அம்பத்தேழு இருக்கேன். ”
“இன்னும் ஒரு மூணு கிலோ குறைக்கணும் அண்ணி. பெர்பெக்டா மாறிடுவீங்க. அப்புறம் அண்ணன் உங்களை பாத்தா. அப்படியே தலைல தூக்கி வச்சு ஆடுவான். ”
நான் சிரித்துக்கொண்டே சொல்ல, அண்ணியின் முகம் பட்டென்று சுருங்கியது. சில வினாடி முன்னால் அவள் முகத்தில் பூத்திருந்த அந்த அழகுப் புன்னகை படாரென்று காணாமல் போனது. தலையை குனிந்து கொண்டாள். எதையோ யோசிப்பவள் போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள். எனக்கு இப்போது மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு. கொஞ்ச நாளாகவே அண்ணி இப்படிதான் செய்கிறாள். அண்ணனை பற்றி பேசினாலே அமைதியாகி விடுகிறாள். ஏதாவது கேட்டால், சுரத்தே இல்லாமல் பதில் சொல்லுகிறாள். ஏன் இப்படி எல்லாம் செய்கிறாள். ? நான் அவளிடமே கேட்டேன்.
“ஏன் அண்ணி திடீர்னு ஒரு மாதிரியாயிட்டீங்க. ?”
“அ. அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான் நார்மலாத்தான் இருக்கேன். ” அண்ணி சகஜமாக இருப்பது போல நடித்தாள்.
“இல்லை. நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க. அண்ணனை பத்தி பேச்சு ஆரம்பிச்சதுமே உங்க முகம் மாறிடுச்சு. ”
“ச்சே. ச்சே. அதெல்லாம் ஒன்னும் இல்லை சிவா. ”
“பொய் சொல்லாதீங்க அண்ணி. இன்னைக்கு மட்டும் இல்லை. கொஞ்ச நாளாவே நான் கவனிச்சுட்டுதான் இருக்கேன். ஏன் அண்ணி. என்னாச்சு. ?”
அண்ணி இப்போது எதுவும் பேசவில்லை. தலையை குனிந்தவாறு சைலண்டாக அமர்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு நானே தொடர்ந்தேன்.
“அண்ணி. அண்ணனை. அண்ணனை உங்களுக்கு புடிக்கலையா. ?”
நான் கேட்டதும் அண்ணி விரக்தியாக சிரித்தாள். எங்கேயோ வெறித்து பார்த்தபடி சொன்னாள்.
“ஹ்ஹ்ம். கல்யாணம் ஆன அடுத்த நாளே. என்னை விட்டுட்டு வேலைக்கு ஓடிப்போன புருஷனை எந்த பொண்டாட்டிக்கு புடிக்கும் சிவா. ?”
“ச்சே. ச்சே. அண்ணனை அப்படிலாம் தப்பா சொல்லாதீங்க அண்ணி. வரப்போற வொய்ப் பத்தி ரொம்ப கற்பனை வச்சிருந்தான். பொய் சொல்லிருக்காங்கன்னு தெரிஞ்சதும். ஏதோ கோபத்துல கெளம்பிட்டான். மத்தபடி அண்ணன் ரொம்ப நல்லவன். ஹ்ஹ்ம். அவனை மட்டும் குறை சொல்லி என்ன பண்றது. ? அம்மா மேலயும் தப்பு இருக்கு அண்ணி. ”
நான் சொன்னதும் அண்ணி என்னை முறைத்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் கூர்மையாக என் கண்களையே பார்த்தவள், கொஞ்சம் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தாள்.
“உன் அண்ணனுக்கு நீ வக்காலத்தா. ? சரி. அத்தை மேலயும் கொஞ்சம் தப்பு இருக்கு. ஒத்துக்குறேன். ஆனா நான் என்ன பாவம் பண்ணுனேன் சிவா. ? எனக்கு எதுக்கு அப்படி ஒரு தண்டனை கொடுத்தாரு. ? எவ்வளவு கனவோட நான் பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள போயிருப்பேன். ? என் மனசுக்குள்ள என்னென்ன ஆசைலாம் இருந்திருக்கும். ? சொல்றதுக்கே வெக்கமா இருக்கு சிவா. அவரு வெரல் நகம் கூட என்னை தொட்டுப் பாக்கலை. உள்ள நுழைஞ்சதும், நுழையாததுமா ‘உனக்கு இது தெரியுமா.
அது தெரியுமா’ ன்னு வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி கேள்வி கேட்டு. கடைசில என்னை வேணான்னு ரிஜெக்ட் பண்ணிட்டு போயிட்டாரு. அன்னைக்கு நைட்டு புல்லா நான் தூங்கவே இல்லை தெரியுமா. ? அழுதுட்டே இருந்தேன். அப்பா. !!!! என் பர்ஸ்ட் நைட் மாதிரி ஒரு டார்ச்சர் நைட்டை என் வாழ்நாள்ல அனுபவிச்சதே இல்லை. ”
அண்ணி படபடவென்று சொல்லிவிட்டு, தலையை உலுக்கிக் கொண்டாள். அந்த இரவை நினைத்து இப்போதும் நடுங்குபவள் போல, அவளிடம் இருந்து ஒரு சிலிர்ப்பு வெளிப்பட்டு அடங்கியது. எனக்கு அண்ணியை பார்க்க பாவமாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்குமாறு பேச ஆரம்பித்தேன்.
“சரி விடுங்க அண்ணி. நடந்தது நடந்து போச்சு. இனிமே நடக்குறது நல்லா இருக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க அண்ணனோட சந்தோஷமா வாழப் போறீங்க. பழசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு மறந்துடும். ”
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி “ப்ச்” என்றாள். அலட்சியமாக பார்வையை எங்கோ திருப்பிக் கொண்டாள். எனக்கு இப்போது அண்ணி மீது சற்று எரிச்சல் வந்தது. அப்படி என்ன ஒரு அலட்சியம் இவளுக்கு. ?
“என்ன அண்ணி இது. நான் இவ்வளவு சொல்றேன். நீங்க பாட்டுக்கு வேற எங்கேயோ திரும்பிகிறீங்க. ? உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. ?” நான் கேட்க,
“சத்தியமா இல்லை. ” அண்ணி பட்டென்று பதில் சொன்னாள். நான் அதிர்ந்து போனேன்.
“என்ன அண்ணி சொல்றீங்க. ? நம்பிக்கை இல்லையா. ? சும்மா வெளையாடாதீங்க அண்ணி. ” நான் சொல்ல, அண்ணி எரிச்சலானாள்.
“நான் எதுக்கு வெளையாடப் போறேன். ? என்க்கு நடனம், இலக்கியம் படிக்க வைங்கன்னு என்னைக்காவது நான் வந்து உங்களை கேட்டிருக்கேனா. ? அத்தையும், நீயுந்தான் என்னை இலக்கியம் நடனம், நாடகம் படிக்க வைக்க. என்று கங்கணம் கட்டிட்டு எல்லா வேலையும் செய்யுறீங்க. ”
நான் இப்போது சுத்தமாக குழம்பிப் போனேன். இவளுக்கே கலைஆர்வம் இல்லை என்றால். அப்புறம் இந்த எக்சர்சைஸ், நடனம், நாடகம் பாட்டு. இந்த எழவெல்லாம் எதற்கு. ? பேசாமல் இவள் அப்பா வீட்டுக்கு சென்று விடுவதுதானே. ? எதற்காக இதெல்லாம் கற்றுக்கொண்டு கஷ்டப் படுகிறாள். ? நான் அவளிடமே கேட்டுவிட முடிவு செய்தேன்.
“அண்ணி. என்ன பேசுறீங்க நீங்க. ? என்னமோ எங்களுக்காகத்தான் மாதிரி பேசுறீங்க. ? உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா. அப்புறம் எதுக்கு இந்த எக்சர்சைஸ், நடன க்ளாஸ்லாம். ? எதுக்கு இதெல்லாம் கத்துக்குறீங்க. ? அதுவும் சும்மா கடனுக்கு கத்துக்காம. அவ்வளவு ஆசையா கத்துக்குறீங்க. அது ஏன். ? சரி. நேத்து ஸ்விம்மிங் போனோமே. அப்போ கூட எவ்வளவு சந்தோஷமா, ஆசையா வந்தீங்க. உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா. அப்புறம் எதுக்கு இவ்வளவு ஆசையா எல்லாம் கத்துக்குறீங்க. ?”
நான் கேட்டதும் அண்ணி பட்டென்று அமைதியானாள். தலையை கவிழ்த்துக் கொண்டாள். அசைவில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்த நான், பின்பு பொறுமை இல்லாமல் கேட்டேன்.
“கேக்குறேன்ல. ? பதில் சொல்லுங்க அண்ணி. ”
நான் சற்று கோபமாக கேட்டதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் என் கண்களையே ஒரு மாதிரி பார்த்தவள், பின்பு ஒரு நீளமான பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தாள்.
“சிவா. நான் இதெல்லாம் சந்தோஷமா கத்துக்குறதுக்கு காரணம். நீ எனக்கு சொல்லித் தர்றதாலதான். நேத்து ஸ்விம்மிங் போறப்போ. நான் சந்தோஷமா இருந்தது, ஸ்விம்மிங் போற ஆசைல இல்லை. உன்கூட தனியா கொஞ்ச நேரம் இருக்கப்போறேனேன்ற சந்தோஷந்தான். இப்போகூட அதிகாலைல அலாரம் வச்சு. எதுக்கு இப்படி இந்த பார்க்கை எட்டு ரவுண்டு அடிக்கிறேன். ? எல்லாம் நீ என் கூட ஓடி வர்றதாலதான். எனக்கு. எனக்கு. உன் பக்கத்துலேயே இருக்கணும் போல இருக்கு சிவா. நீ என் மனசு பூரம் இருக்கே. ”
அண்ணி பேசிக்கொண்டே போக, எனது இதயத்துடிப்பு ‘படக் படக்’ என்று அதிகமாகிக் கொண்டே போனது. அப்படி என்றால் நான் சந்தேகப்பட்டது உண்மைதானா. ? அண்ணி என்னை. என்னை. ?
“அ. அண்ணி. எ. என்ன சொல்றீங்க நீங்க. ? நான் உ. உங்க பக்கத்துல. ”
“ஆமாம் சிவா. இனிமேலயும் நான் மறைக்க விரும்பலை. ஐ. ஐ லவ் யூ சிவா. நான். உன் மேல என் உயிரையே வச்சிருக்குறேன். ”
அண்ணி என் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டு சொல்ல, நான் சுத்தமாக அதிர்ந்து போனேன். சப்த நாடியும் அடங்கிப் போய் அண்ணியையே பார்த்தேன். அவளுடைய ஏக்கப் பார்வை என் மனதை என்னவோ செய்தது. நோ. !! அண்ணி தப்பு செய்கிறாள். கணவனின் தம்பியை காதலிப்பதா. ?
“அண்ணி. என்ன உளர்றீங்க நீங்க. ? என்னைப் போய். ச்சே. ”
“ஏன். நான் உன்னை லவ் பண்ணக் கூடாதா. நீயும் ராமு இரட்டை பிறவிதானே. பார்க்க ஒரே மாதிரியிருக்கிறீங்க. உன் அண்ணனுக்கு என் மேல் ஆர்வம் இல்லை. நீ தான் என்னை பார்த்துக்கொள்ளுகிறே. ?”
“என்ன அண்ணி பேசுறீங்க. நான் உங்க புருஷனோட தம்பி. ”
“அதனால என்ன. ? என்னைக் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம. கட்டிக்கிட்ட அடுத்தநாளே என்னை விட்டுட்டு ஓடிப்போன என் புருஷனை விட. என்னை புரிஞ்சுக்கிட்டு. எனக்காக கஷ்டப்படுற. என் மேல பிரியமா இருக்குற. உன்னை. எனக்கு புடிச்சு போனதுல என்ன தப்பு சிவா. . ?”
“தப்புதான் அண்ணி. பெரிய தப்பு. உங்களுக்கு தாலி கட்டுனவன் ராம். இன்னைக்கு வேணா அவன் உங்களை விட்டுட்டு இருக்கலாம். ஆனா நாளைக்கே அவன் உங்களை புரிஞ்சுகிட்டு வந்து உங்களை ஏத்துப்பான். என்னைக்கா இருந்தாலும் நீங்க அவனுக்கு சொந்தமானவங்க அண்ணி. எனக்கு இல்லை. அவன். அவன். உங்களை தொட்டு தாலி கட்டிருக்கான் அண்ணி. என்னை லவ் பண்றதா சொல்றது. அவனுக்கு நீங்க பண்ற துரோகம். ”
“ஒரு மஞ்சக் கயித்தை கழுத்துல கட்டிட்டா. மனசுல இருக்குற ஆசையை எல்லாம் தனியா தூக்கி வச்சிரனுமா சிவா. ?”
அண்ணி என் கண்களைப் பார்த்து கூர்மையாக கேட்க, என்னிடம் அதற்கு சரியான பதில் இல்லை. நான் திணறிக் கொண்டிருக்க, அண்ணியே தொடர்ந்தாள்.
“என் மனசு புல்லா நீதான் இருக்க சிவா. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற. ? என் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்குற. ? எனக்கு எது புடிக்கும். எது புடிக்காதுன்னு பாத்து பாத்து பண்ணுற. ? என் மேல எவ்வளவு பிரியமா இருக்குற. ? ஒரு பொண்ணு. யார் அவ மேல பிரியமா இருக்காங்களோ.
அவங்களுக்குதான் அவ சொந்தமாகனும்னு நெனைப்பா. நான் உனக்கு சொந்தமானவளா இருக்க ஆசைப்படுறேன் சிவா. உன் அண்ணனுக்கு இல்லை. கல்யாணத்துக்கு அடுத்த நாளே போனாரே. இதுநாள் வரை என்னைக்காவது எனக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை பேசிருப்பாரா. ? சும்மா தாலி கட்டிட்டா சொந்தமாயிட முடியுமா. ? அவ மேல அன்பா. பிரியமா இருக்க வேணாமா. ? என் மேல பிரியமா இருக்குற நீதான் எனக்கு வேணும் சிவா. வேற யாரும் வேணாம். ”
அண்ணி பேசிக்கொண்டே போக, நான் திகைத்துப் போனேன். அவளுடைய நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினேன். ஆனால் அண்ணியின் இந்த ஆசையை வளரவிடக்கூடாது என்று எண்ணினேன். ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். எனக்கு பட்டென்று அந்த யோசனை வந்தது. நான் மிக நல்லவன் என்றுதானே அண்ணி எனக்காக இப்படி உருகுகிறாள். ? அண்ணியின் மனதில் இருக்கும் என்னைப் பற்றிய இமேஜை ஸ்பாயில் செய்தால். ? அவளுக்கு என் மீது ஒரு வெறுப்பு வந்தால். ? என்னை மறந்துவிடுவாள்தானே. ? நான் துணிந்து அந்த பொய்யை சொன்னேன்.
“புரியாம பேசாதீங்க அண்ணி. நான் எதுக்கு இதெல்லாம் கஷ்டப்பட்டு உங்களுக்கு கத்து தர்றேன். ? எதுக்கு உங்ககிட்ட பிரியமா நடந்துக்குறேன். ? எல்லாம் நீங்க என் அண்ணனோட வொய்ப்-ன்றதாலதான். நீங்க அவனோட சேர்ந்து வாழனும்னுதான். எப்போ நீங்க என் அண்ணனை புடிக்கலைன்னு சொன்னீங்களோ. அப்போவே அந்த பிரியமும் போயிடுச்சு. சும்மா இப்படி கஷ்டப்படுறதுக்கு. உங்க மேலே பிரியம் காட்டுறதுக்கு. எனக்கு என்ன தலையெழுத்தா. ? என் அண்ணனை உங்களுக்கு வேணாம்னா. என்னைப் பொறுத்தவரை நீங்க யாரோ. நான் யாரோ. ”
நான் அண்ணியை பார்த்து ஏளனமாக சொல்ல, அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் என்னையே பார்த்தாள். காயம்பட்டு தரையில் விழுந்த பறவை போல ஒரு பரிதாப பார்வை பார்த்தாள். என் கண்கள் வழியே பாய்ந்து, என் இதயத்தை என்னவோ செய்தது அந்த பார்வை. என்னுடைய சுடுசொற்கள், நான் நினைத்ததை விட அதிகமாகவே அண்ணியை காயப்படுத்தி விட்டன என்று எனக்கு உடனே புரிந்து போனது.
இப்போது அண்ணியின் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. முத்து மாதிரி ஒரு துளி அவள் கண்ணில் இருந்து கிளம்பி, கன்னத்தை நனைத்து ஓடியது. அண்ணியின் உதடுகள் லேசாக துடித்தன. அவள் அந்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். ஒரு ஐந்து வினாடிகள் அப்படியே என்னை பார்த்த அண்ணி, பின்பு பட்டென்று அவள் முகத்தை தன் கால்களுக்கு இடையில் புதைத்துக் கொண்டாள். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
நான் பதறிப் போனேன். அவசரப்பட்டு அப்படி சொல்லிவிட்டேனோ. ? என்னைப் பற்றி தப்பாக நினைத்துக் கொள்ளட்டும் என்று பொய் சொன்ன எனக்கு, இப்போது அண்ணி அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் இதயம் பதறியது. பாவம். அன்புக்காக ஏங்குகிறாள். அவளைப்போய் காயப்படுத்திவிட்டேனே. பட்டென்று அவளது தோளைப் பிடித்து உலுக்கினேன்.
“ஐயோ. !! என்ன அண்ணி இது. ? எழுந்திருங்க. அழாதிங்க. ப்ளீஸ். ”
“போடா. ”
“ப்ளீஸ் அண்ணி. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. ”
“நீ ஒன்னும் சொல்ல வேணாம். போ. என் மேல பிரியமா இருக்குறதுக்கு நீயாவது இருக்கேன்னு நெனச்சேன். நீயும் என்னை ஏமாத்திட்டில்ல. ? போ. ”
“சாரி. அண்ணி. தப்புதான். நான் அப்படி சொல்லிருக்க கூடாது. ”
“பேசாத. போயிடு. வேணாம். யாரும் என்மேல பிரியமா இருக்க வேணாம். எனக்கு யாரும் வேணாம். போ. ”
“அண்ணி. ப்ளீஸ். நான். நான். சும்மா பொய் சொன்னேன் அண்ணி. எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும். நீங்க என் அண்ணனோட வொய்ப்பா இல்லாட்டாலும். நான் உங்க மேல பிரியமா இருப்பேன் அண்ணி. உங்க மனசை மாத்துறதுக்காக அப்படி பொய் சொன்னேன். என்னை நம்புங்க அண்ணி. அழாதீங்க. ப்ளீஸ். ப்ளீஸ் அண்ணி. ”
கருத்து எழுதுங்கள்