Okkum facebook நண்பனின் முன்னால் காதலி-33
விக்கி சுவாதியை காரில் உக்காரவைத்து ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போனான் .பின் ஆஸ்பத்திரி வந்ததும் அவளை எழுப்பினான் .அவளும் எழுந்து நடந்து வந்தாள் .
பின் அவளை டாக்டரிடிம் கூப்பிட்டு சென்றான் .டாக்டர் அவளை பார்க்கும் முன் விக்கியை பார்த்து நீங்கதான் இவங்க ஹஸ்பண்டா என்று கேட்டார்கள் .
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ஏற்கனவே ஒரு ஆஸ்பத்திரியில் சண்டை போட்டது ஞாபகம் வர எதுக்கு வம்பு ஆமா என்று சொல்லி தொலைப்போம் என்று மனதில் நினைத்து கொண்டு ஆமாம் எனபது போல் வெறும் தலையை மட்டும் ஆட்டினான்.
டாக்டர் அவனை முறைத்து விட்டு சுவாதியை தனியாக கூப்பிட்டு சென்று செக் ஆப் செய்தனர் .பின் சுவாதியை பார்த்து கோபமாக மதியம் என்ன சாப்பிட்ட என கேட்டார் .வேற ஏதாவது சாப்பிட்டியா என கேட்டார் .இல்ல டாக்டர் என்று சொல்லிவிட்டு ம்ம் சாயங்காலம் பஜ்ஜி சாப்பிட்டேன் என்றாள் .
அதை கேட்டு டாக்டர் மிகவும் கோபம் அடைந்தார் .சுவாதியை செல்லமாக தலையில் கொட்டி குழந்தைய வயுத்தில வச்சுக்கிட்டு இப்படி செமிக்காத எண்ணெய் பண்டமா சாப்பிடறது என்றார் கோபத்தோடு .
இல்ல டாக்டர் ஆசையா இருந்துச்சு அதான் என்று இழுத்தாள் .ஆசையா இருந்தா எத வேணும்னாலும் சாப்பிட்ட்ருவியா .இப்ப நீ மட்டும் இல்ல உள்ள ஒரு உயிர் இருக்கு அத மறந்துடாத.நீ சாப்பிட்ட எண்ணெய் பண்டம் குழந்தைக்கு ஒத்துகிறாமாதான் உனக்கு வாந்தியும் மயக்கமும் மாறி மாறி வந்து இருக்கு என்றார் .
சாரி டாக்டர் என்றாள் சுவாதி .ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல இரு உன் புருஷன் கிட்ட சொல்றேன் என்றார் .ஐயோ வேணாம் டாக்டர் என்று சுவாதி சொல்லி கொண்டு இருக்க அதை கேட்கமால் டாக்டர் திரையை விளக்கி விட்டு விக்கியிடம் போனார்கள் .
என்ன மிஸ்டர் பொண்டாட்டிக்கு ரொம்ப முடியாட்டி மட்டும்தான் ஆஸ்பத்திரிக்கு வருவிங்களோ என்றார் .அதை கேட்டு விக்கி புரியமால் முழிக்க சுவாதியை பார்த்தான் .
அங்க என்ன பாக்குறிங்க வீட்டுக்கு போனதும் திட்டலாம்னு பாக்குறிங்களா என டாக்டர் கேட்டார் .விக்கி சரி பொறுமையவே போவோம் என்று நினைத்து கொண்டு அப்படி இல்ல டாக்டர் ஆபிஸ்ல கொஞ்சம் வொர்க் பிஸி அதான் வர முடியல என்றான் .அதை கேட்டு சுவாதி ஆச்சரியப் பட்டாள் .என்ன இவன் இன்னைக்கு சுத்தமா எதுக்குமே கோப படாம இருக்கான் என்று நினைத்தாள் .
எவளோ பிஸியா இருந்தாலும் அட்லிஸ்ட் மாந்தளி ஒரு தடவயாச்சும் வோயிப் கூட வாங்க அது உங்க குழந்தையும்தான அப்ப நீங்களும் அக்கறை காட்டனும் தான என்றார் .
விக்கி திணறி கொண்டே ஆமா டாக்டர் சரி டாக்டர் என்றான் .பாருங்க நீங்க வொர்க் பிஸில இருக்கீங்க அதுனால உங்க பொண்டாட்டிய பாத்துக்க முடியாம அவங்க கண்டதையும் சாப்பிற்றுகாங்க அதுனால இப்படி உடம்புக்கு முடியாம இருக்காங்க என்றார் .
உடனே விக்கி சுவாதியை மாட்டிவிட்டு நம் தப்பி விடலாம் என்று நினைத்து நான் சொன்னேன் டாக்டர் இவதான் கேக்கல நானும் பாவம் ஆசபடுறாலேன்னு வாங்கி கொடுத்தேன் என்றான் .
அதை கேட்டு சுவாதி மனதிற்குள்ளே அடப் பாவி என்றாள் .ம்ம் புருஷன் சொல்லியும் நீ கேக்கல அப்ப உன்னதான் உதைக்கன்னும் என்று சுவாதியை திட்டினார் .அவள் சாரி டாக்டர் என்றாள் .
என்னையே கேட்டா உங்க ரெண்டு பேத்தையும் உதைக்கனும் ரொம்ப careless எஆ இருக்கீங்க சரி மருந்தும் சிரபும் கொடுக்கிறேன் ஒழுங்கா சாப்பிடு அப்புறம் இந்த மாதிரி கண்டதையும் சாப்பிடாத சரியா என்று சுவாதியை பார்த்து சொன்னார் டாக்டர் .அப்புறம் சார் வொர்க்லையே முழ்கி இருக்காம அப்ப அப்ப வோயிப்யையும் பாருங்க என்றார் .
சரிங்க டாக்டர் என்றான் .சரி ரெண்டு பேரும் அடுத்த மாசம் வாங்க என்றார் .thank you டாக்டர் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர் .
அப்போது டாக்டர் சுவாதி ஒரு நிமிஷம் உன் ஹஸ்பெண்ட் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றார் .உடனே சுவாதி விக்கி கிட்ட டேய் ப்ளிஸ்டா எதுவும் கோப பட்டு அன்னைக்கு மாதிரி கத்திராதடா மும்பைல எனக்கு இந்த ஒரு ஆஸ்பத்திரி தான் தெரியும் என்று கெஞ்சினாள் .ஓகே நான் பாத்துகிறேன் என்றான் .
என்ன சுவாதி பயப்படாத உன் ஹச்பண்ட் எதுவும் அடிக்க மாட்டோம் என்றார் சிரித்து கொண்டே .சுவாதியும் சிரித்து கொண்டே நான் வெளியே இருக்கேன் டாக்டர் நீங்க பேசிட்டு அனுப்புங்க என்று சொல்லிவிட்டு வெளியே போனாள் .
பிறகு விக்கி பயந்து கொண்டே நின்று கொண்டு இருந்தான் .அவனை பார்த்து டாக்டர் சொன்னார் வாங்க சார் வந்து உக்காருங்க என்றார் .அவனும் வந்து சேரில் உக்காந்தான் .
ம்ம் மிஸ்டர் உங்க பேரு என்றார் .என் பேரு விக்னேஷ் டாக்டர் என்றான் .மிஸ்டர் விக்னேஷ் எங்க வேலை பாக்குறிங்க என கேட்டார் .gnb கம்பனில டாக்டர் என்றான் .நல்லது பெரிய கம்பனிதான் என்று சொல்லிவிட்டு டாக்டர் சிறிது நேரம் யோசித்தார் .
பிறகு வீட்ல வேலைக்கு ஆள் இருக்கா எல்லா வேலையும் உங்க வோயிப் தான் பாக்குருங்களா என கேட்டார்.வேலைக்காரி யாரும் இல்ல டாக்டர் எல்லா வேலையும் அவ தான் பாக்குறா என்றான் .
பிறகு டாக்டர் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார் .அதை பார்த்து விக்கி கேட்டான் என்ன டாக்டர் என்ன விஷயம் என்றான் .ம்ம் விக்னேஷ் உங்க வோயிப் கொஞ்சம் வீக்கா இருக்காங்க ஒன்னு அவங்க நிறைய வேலை செய்யணும் இல்ல மனசு அளவுல அவங்க கொஞ்சம் ஆப் செட்டா இருந்து இருக்கலாம் .
இது ரெண்டு நாலையும்தான் அவங்க உடம்பு வீக்கா இருக்கணும் .நான் நினைக்கிறேன் நீங்க வொர்க் பிஸில அவங்கள சரியா கவனிக்காம அவங்க கிட்ட சரியா பேசாம இருந்து இருப்பிங்க அதான் அவங்க மனசு அளவுல வருத்தப்பட்டு இருப்பாங்க அதான் அவங்க உடம்பு வீக் ஆகிருக்கும் என்றார் .
கருத்து எழுதுங்கள்