பகுதி 2
எனது மூத்த அக்கா எங்களது நட்பு நெருங்கி வருவதை மிகவும் எதார்த்தமாக கூறியதை தொடர்ந்து. நான் எங்களது குடும்ப வாட்ஸ்அப் குரூப்பில் மீண்டும் அவளிடம் நெருங்கி பேசுவதை மெது மெதுவாக குறைத்து கொண்டு வந்தேன். அவளும் மற்றவர்கள் கவனித்து கூறும் அளவிற்கு எங்கள் நட்பு வளர்ந்ததை புரிந்து கொண்டு.
அதன் பிறகு மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்று அனைவரின் முன்னும் சற்று இடைவெளி கொண்டே பழகி வந்தாள். ஆனாலும் நேரில் சந்தித்துக்கொள்ளும் பொழுது எல்லாம் எங்கள் பேச்சு. சினிமா. நண்பர்கள்.
பழைய வாழ்க்கை என்று அனைத்தை பற்றியும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தோம். இந்த நிலையில் அவள் பள்ளி. கல்லூரி நாட்களில் அவளுக்கு வந்த காதல் கடிதம் போன்றவற்றை என்னிடம் கூறும் அளவிற்கு எங்கள் நட்பு வளர்ந்து இருந்தது.
மாதங்கள் நகர்ந்து ஓடின அவளுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அவள் அடுத்தவரின் மனைவி மற்றும் அவள் சுமப்பது இன்னொருவரின் குழந்தை என்பதை பற்றி எனக்கு கவலை இல்லாமல் எனக்கே குழந்தை பிறக்க போவது போல் மகிழ்ச்சியாக இருந்தேன்.
அதை அவளும் அவ்வப்போது என்னிடமே கேட்பாள். மூத்த மற்றும் நடு அக்காவிற்க்கு குழந்தை பிறக்க போகும் போதும் இப்படி தான் நடந்து கொண்டாயோ என்று. அவர்களுக்கும் குழந்தை பிறக்கும் நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். ஆனால் எனது இந்த அதீத மகிழ்ச்சிக்கு காரணம் நீ எனக்கு உறவு மட்டும் அல்ல என்னுடைய நெருங்கிய தோழியாக இருப்பதால் தான் என்று கூறினேன்.
அவளும் அதை மிகவும் மகிழ்ச்சியாக ஆமோதித்து கொண்டாள்.
வளைகாப்பு க்கு சில நாட்களுக்கு முன்னால் அவளுக்கு திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநாள் வந்தது அவளுக்கு பிடித்த ஒயிட் ஃபாரஸ்ட் கேக் ஒன்று ஆர்டர் செய்து அவளுக்கு ஆச்சர்யம் அளித்தேன். மற்றவர்கள் முன்னிலையில் நான் வாங்கி வைத்த பரிசை கொடுத்தால் கண்டிப்பாக அது சர்ச்சைக்கு உரிய பேச்சாக மாறும் என்பதால் அடுத்தநாள் அதை தனியாக கொடுக்க நினைத்திருந்தேன்.
அடுத்த நாளும் வந்தது என் அத்தை வீட்டிற்கு சென்றேன் எப்பொழுதும் அழைப்பு மணியையோ. யாரையும் வெளியே நின்று அழைக்கும் பழக்கம் இல்லாததால் எப்பொழுதும் போல் நான் நேராக வீட்டிற்குள் சென்று என் அத்தையிடம் டாலி இருக்கிறாளா என்று கேட்டேன்.
அவர்களும் மேலே அவள் அறையில் இருக்கிறாள் என்று கூற சரி நான் சென்று பார்க்கிறேன் என்று கூறி மேலே சென்றேன். எனது அத்தை (அப்பாவின் அக்கா) மற்றும் எனது மூத்த அக்காவிற்கு வீட்டின் கீழே அறை இருந்தது. எனது நடு அக்காவுக்கும்.
எனது காதலிக்கும் மாடியில் இருக்கும் முதல் மற்றும் இரண்டாவது அறை ஒதுக்க பட்டு இருந்தது. நான் முதல் அறையை தாண்டி இரண்டாவது அறைக்கு சென்ற பொழுது அறைக்குள் சத்தமாக பாட்டு ஓடும் சத்தம் கேட்டு கொண்டு இருந்தது. நான் ஓரிரு முறை கதவை தட்டிவிட்டு திறக்கவில்லை என்றதும் வெளியே மாடியில் சென்று கதவு திறக்கும் வரை காத்திருக்க எண்ணி சென்ற பொழுது.
எதார்த்தமாக கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த பொழுது தெளிவாக இல்லாமல் அவள் ஒரு முக்காலியின் மேல் ஏறி ஃபேனை சுத்தம் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது. உடனே பதற்றமாக அவள் பொதுவாக அனைவரின் அறை சாவி வைக்கும் இடம் எனக்கு தெரியும் என்பதால். அவளின் அறையை திறது அவளை திட்டிவிட்டு நான் உதவி செய்ய எண்ணி உள்ளே பார்த்த போது தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது.
அவள் மேலே ஏறியது பேனை சுத்தம் செய்ய அல்ல தற்கொலை செய்து கொள்ள எண்ணி கதவை பூட்டிவிட்டு இவ்வாறு செய்து இருக்கிறாள் என்று.
எனக்கு என் உயிரே போய்விடும் போல பயமும். கண்மூடி தனமான கோபமும் வந்தது. இதை யாரும் பார்த்து விட கூடாது என்று எண்ணி உடனடியாக கதவை சாத்தி விட்டு அவளை காலோடு சேர்த்து தூக்கி பக்கத்து கட்டிலில் இருந்த மெத்தையின் மேல் மெதுவாக படுக்க வைத்து விட்டு.
அவளை எதுவும் பேசவிடாமல் வேகவேமாக மேல் ஏறி அவள் ஃபேன் இல் கட்டி வைத்து இருந்த சேலை தலைப்பை அவிழ்த்துவிட்டு கீழிறங்கி கோபத்தில் அவள் கன்னத்தில் அரைந்து விட்டேன்.
அழுக முற்பட்ட அவளை தடுத்து தயவு செய்து இங்கு நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறி அவளை கொஞ்சம் ஆசுவாசம் படுத்தி. தண்ணீர் குடுத்து என்ன நடந்தது என்று பொறுமையாக கூறும்படி சொன்னேன்.
பிறகு அவள் பேச தொடங்கினாள். சில நாட்களாக அவளுக்கும் எனது மாமாவுக்கும் இடைய சண்டையாக இருப்பதாகவும். குழந்தை பிறக்கும் முன் இங்கு வர சொல்லி கேட்டால் அவர் இங்கு வேலை இருக்கிறது என்றும் என்னால் இப்போது வர முடியாது.
குழந்தை பிறந்து நீ உனது அம்மா வீட்டில் இருந்து எங்கள் வீட்டிற்க்கு வரும் வரை என்னால் வர முடியாது என்று கூறிவிட்டார் என்று சொன்னால். மேலும் எப்பொழுது போன் செய்தாலும் வேறு யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பதாக கூறினாள்.
நேற்று பிறந்த நாள் அன்று கூட ஒழுங்காக பேசவில்லை. சரி என்று இரவு சமாதானமாக பேசலாம் என்று போன் செய்தால் அவருக்கு அழைப்பு செல்ல வில்லை. ஒரு மணி நேரமாக சிங்கப்பூரில் இங்கு இருப்பதைவிட 2½ மணி நேரம் அதிகம் அப்படி இருக்க.
நான் போன் செய்யும் பொழுது அங்கு இரவு 1 மணி அந்த நேரத்தில் யாருடன் ஒருமணி நேரம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும். என்று இன்று காலை கெட்ட பொழுது இப்படி என்னை தொல்லை பண்ணாம பேசாமல் செத்து தொலை என்று கூறிவிட்டார். அதனால் தான் இப்படி செய்ததாக கூறினாள்.
எனக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. எல்லாம் சரி ஆகிவிடும் என்று பொய்யாக ஆறுதல் கூறினேன் உன் குழந்தையை பற்றி யோசிக்காமல் இப்படி செய்கிறாய் என்று லேசாக கடிந்து விட்டு நடந்ததை மறந்து விடு இப்போது நான் வந்தது உனக்கு இந்த பிறந்தநாள் பரிசை குடுக்க தான்.
நேற்று அனைவரின் முன்னும் குடுத்தால் பேசும் பொருள் ஆகிவிடும் என்பதால் தான் இப்போது குடுக்க வந்தேன். நல்ல வேலை நேற்றே தராமல் இருந்தேன் என்று கூறி அவள் கைகளில் கொடுத்தேன் அவள் லேசாக விரக்தி புன்னகை புரிந்து வாங்கி கொண்டு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்க.
திறந்து பார் டாலி என்று பெயர் சொல்லி கூப்பிட்டு சிரிக்க வைக்க முயன்றேன். முயற்சி வீணாகவில்லை. புன்முறுவல் செய்து பிரித்து பார்த்தால் அவளுக்கு பிடித்த வயலேட் நிற சுடிதார் மற்றும் லெக்கிங்ஸ் இருந்தது. அவள் இது எனக்கு பிடித்த நிறம் சரியான நிறம் வாங்கி வந்து இருக்க டா என்று சிரித்து கொண்டு கூறினாள்.
நான் எனக்கு தெரியும் உனக்கு பிடித்த நிறம் என்று கூற. ஆச்சர்யமாக பார்த்து எப்படி என்று கண்களால் வினவினாள். நான் பல முறை உன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் நீ பிடித்த பாடல் வரிகளை எழுதி வைக்கும் பொழுது ஒவ்வொரு தடவையும் அந்த வயலெட் நிற பின்னணி மட்டுமே வைப்பாய்.
ஒரு சில தடவைக்கு பிறகு ஒவ்வொரு முறையும் நீ அந்த குறிப்பிட்ட நிறத்தை தேர்ந்து எடுத்து வைப்பதை கவனித்ததில் அது உனக்கு பிடித்த நிறமாக தான் இருக்கும். என்று எண்ணியாதக கூற என்னை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாய் என்று கூறி நெகிழ்ந்து போனாள்.
நான் நண்பர்கள் என்றால் அப்படிதான் என்று பொதுவாக கூறி முகம் கழுவி விட்டு ஓய்வெடுக்க சொல்லி செல்லும் முன் இனி எந்த பெரிய சண்டை வந்தாலும் இப்படி தவறான முடிவு எடுக்க கூடாது. என்று கூறி அவள் கையை எடுத்து என் தலைமேல் வைத்து இது என்மேல சத்தியம் என்று சொல்ல அவள் என் கண்களையே சற்று விநோதமாக பார்த்தால்.
அவளுக்கு வளைகாப்பு நடந்தது வெளியே இருந்து புகைப்பட கலைஞர்கள் வந்து புகைப்படம் எடுத்து கொண்டு இருக்க. எனக்கும் புகைப்படத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் என் மொபைல் ஃபோனில் என்னால் முடிந்த கோணங்களில் எல்லாம் அவளை அழகாக படம் பிடித்து வைத்து கொண்டேன்.
அவள் வளைகாப்பு முடிந்து அவள் அம்மா வீட்டிற்க்கு சென்றால்.
இதற்கு இடையில் நாங்கள் குரூப் இல் பேசுவதை தவிர்த்து தனியாக சாட்டிங் செய்வதை வழக்கமாக மாற்றிக்கொண்டு பேசி வந்தோம்.
அவளுக்கும் மாமாவுக்கும் இடையே இன்னும் சண்டை நீடிப்பதால் அவள் அவரிடம் பேசுவதில்லை. என்றும் அவராக போன் செய்தாள் மட்டும் பொதுவாக பேசி விட்டு வைத்து விடுவதாய் சொல்லி அதனால் இப்போது சண்டை இல்லாமல் சற்று இடைவெளி இருப்பதாக சொன்னால்.
மேலும் குழந்தை பிறக்க போகும் நேரத்தில் அம்மா எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதால் ஃபோனில் பேசுவதை தவிர்த்து வருவதாக கூறினாள். உடனே நானும் போனை வைத்து விடுவதாக கிண்டலாக கூறினேன். அவள் உடனே உன்னிடம் பேசும் பொழுது தான் சற்று நிம்மதியாகவும்.
மகிழ்ச்சி யாகவும் இருப்பதால் தான் உன்னிடம் பேசுகிறேன் என்னோட நிம்மதியை எடுத்துட்டு போறதா இருந்தா போ போன் ஐ வை என்று கூறினாள். நான் சரி மன்னித்து விடு என்று கூறி பேசினேன். அப்போது இவ்வளவு தெளிவாக இருக்கும் நீ ஏன் அவ்வாறு தற்கொலை முடிவு எடுத்தாய் என்று கேட்க.
அதை பற்றி பிறகு சொல்வதாக சொன்னாள். சரி இப்போது உன் கணவன் உனக்கு போன் செய்து நீ பிஸியா இருக்கனு கேட்டா. என்ன பண்ணுவ நீயும் அப்படி சொல்லி தான கேள்வி கேட்ட னு சொன்னேன். நான் விளையாட்டாக அப்படி கேட்டு இருந்தாலும் அப்பொழுது தான் எங்கள் இருவருக்குமே அப்படி ஒரு பிரச்சினை வர வாய்ப்பு இருப்பதை குறித்து சந்தேகம் வந்தது.
சரியென்று இருவரும் வாட்ஸ்அப் இல்லாத இன்னொரு மெசேஜ் அப்பிளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து கொண்டோம். அதில் இருவரும் உபயோகிக்கும் இரண்டாவது சிம் நம்பர் வழியாக பேச தொடங்கினோம். அப்பொழுது தான் நான் அடிக்கடி என் பெயரில் இருந்து ஃபோன் வந்தால்.
உன் உறவினர்களே ஏதாவது நினைப்பார்கள் என்று கூறி என்னுடைய இரண்டாவது எண்ணை உனக்கு அடிக்கடி பேசும் தோழியின் பெயரில் பதிவிடும் படி கூறினேன் அவளும் அவ்வாறு செய்தாள்.
இப்போது நாங்கள் சற்று கூடுதலாக போனில் பேசுவதை வழக்கமாக கொண்டோம். இன்று மீண்டும் என் அவ்வாறு கோழை தனமான முடிவு எடுத்தாய் என்று கேட்டேன்.
அவள் எனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் பற்றி நான் யாரிடமும் சொன்னது இல்லை இப்போது உன்னிடம் சொல்வதாக சொல்லி பேச தொடங்கினாள்.
அவள் உறவு ஆண்களே அவளை சிறு வயதில் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முற்ப்பட்டதும். அதிலிருந்து மீண்டு காதல் வலையில் விழுந்து அவன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று உணர்ந்த சமயத்தில் தான் இந்த கல்யாணம் முடிவானதாக சொல்லி.
இந்த எண்ணங்களில் இருந்து தப்பிக்க தான் தூரமாக வந்த வரணை ஒத்துக்கொண்டு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்ததாகவும். சில மாதங்களிலேயே அந்த நம்பிக்கை வீன் போகவும் அவ்வாறு ஒரு தவறான முடிவு எடுத்ததாக கூறினாள்.
என் கண்கள் கலங்கி லேசாக குரல் தடுமாறியது அதை அவளும் உணர்ந்து இதற்காக ஏன் நீ அழுகிறாய் என்று கேட்க. நான் சமாளிப்பதற்காக ஏதோ சொல்லி பேச்சை மாற்றி. போன் கட் செய்து விட்டேன். என் மனதிற்குள் பல எண்ணங்கள் புயல்களாய் அடித்து கொண்டு இருக்க.
பல துக்கங்களை சுமந்து கொண்டு இருக்கும் அவளை நானும் மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசி ஏமாற்றிக்கொண்டு இருப்பதை நினைத்து எனக்கே என்மேல் வெறுப்பாக இருந்தது.
இதற்கும் மேல் அவளிடம் பொய்யாக நடிக்க மனம் இல்லாமல் அவளிடம் நான் அவளை காதலிக்கும் உண்மையை கூறிவிட முடிவெடுத்தேன்.
திரும்ப அழைப்பதாக சொல்லி போன் கட் செய்ததில் இருந்து பல எண்ண போராட்டங்களுக்கு பிறகு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் அவளுக்கு ஃபோன் செய்தேன்.
கருத்து எழுதுங்கள்