வணக்கம்.. நான் உங்கள் முகிலா… இது என்னுடைய இரண்டாவது பதிவு.. இந்த பதிவில் காமத்தை பற்றி பெண்களின் எதிர்பார்ப்பும் அதை ஆண்கள் எப்படி தன்னுடைய தவறான புரிதலில், தவறாக அணுகுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு தெரிந்த கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தளத்தில் எழுதபடும் கதைகளில் இந்த தலைப்பு பற்றி கொஞ்சம் பேச வேண்டியுள்ளது..
காதல் இல்லா காமம் கசப்பை மட்டுமே தரும். முந்தைய பதிவில் சொன்னது போல் அதுவும் கிட்டதட்ட ஒரு கற்பழிப்பு தான். ஒரு பெண்ணை காதலிக்காமல் காமத்திற்குள் எந்த ஒரு ஆணாலும் நிச்சயமாக அழைத்து செல்ல முடியாது. அது நல்ல காதல் அல்லது கள்ள காதலாக இருந்தாலும் இது பொருந்தும்.
அதை மீறி வலுக்கட்டயமாக அழைத்து சென்றாலும் அது ஆண்களுக்கு மட்டும் சுகமாக இருக்கும் தவிர. பெண்களுக்கு அல்ல.. காமம் என்பது ஆண் பெண் இருபாலரின் மனதும், உடலும், எண்ணமும், எழுச்சியும் ஒரே கோட்டில் பயணித்தால் மட்டுமே காமத்தில் உச்சத்தை எட்ட முடியும். அது இப்போது இந்த தளத்தில் எழுதபடும் பெரும்பாலான கதைகளில் சுத்தமாக இல்லை.
சமீப காலத்தில் இந்த தளத்தில் எழுதபடும் கதைகளில் பெரும்பாலும் குடும்பத்தை சார்ந்த காம கதைகளே வருகின்றன. அதற்கு நான் எந்த குறையும் சொல்லவில்லை. இப்போது இருக்கும் நவின காலகட்டத்தில் இது மிகவும் சாதரணமா விசயம் ஆகிவிட்டது. நிஜ வாழ்க்கையில் இது போன்று நடக்க தொடங்கிவிட்டது. இனியும் நடக்கும்.. ஆனால் கதை என்பது வேறு.. நிஜம் என்பது வேறு. கதை கற்பனையானது. நிஜம் உண்மையானது.
இந்த தளத்தில் கதை எழுதும் எல்லா ஆண்களும் தங்களுடன் பெண்கள் வந்து பேச வேண்டும் என்று ஆசைபட்டே கதை எழுதுகின்றனர் என்று தெரியும். பெண்கள் உங்களிடம் வந்து பேச வேண்டுமென்றால் அவர்களை பற்றி நிஜ வாழ்க்கையின் பார்வையிலிருந்து ஒரு புரிதல் இருக்க வேண்டும்.
அப்படி இல்லையெனில் பெண்கள் எப்படி உங்களிடம் வந்து பேசுவார்கள். கதைகள், காம கதைகள் என்றாலும் அதில் பெண்களை பயன்படுத்தும் முறை, சித்திரிக்கும் முறை என்று ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.. ஆனால் இப்போது எழுதப்படும் கதைகளில் அப்படி ஒன்று இல்லை.
இப்போது வரும் கதைகளை வைத்து பார்க்கும் போது பெண்களை பற்றிய ஆண்களின் பார்வை எவ்வளவு மோசமாக வர்க்கிரமாக இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. உங்களின் கதைகளில் பெண்களை எப்படி சொல்றிங்க என்பதை பொறுத்தே பெண்களின் மத்தியில் உங்களின் மதிப்பு இருக்கும்.
தற்போது வரும் கதைகளில் ஒரு ஆண் தன் குடும்பத்து பெண்களின் கதாபாத்திரத்தை அவ்வளவு தவறாக கேவலமாக சித்தரித்து சொன்னால் அவனால் நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணை எப்படி நல்ல விதமாக எதிர் கொள்ளை முடியும்? அவன் பெண்களை பார்க்கும் பார்வை, அவன் கதையில் சித்தரிக்கபட்டது போன்று தான் இருக்கும். என் வாழ்க்கை அனுபவத்தை வைத்து மற்றும் நான் ஒரு பெண்ணாக இருப்பதால் சொல்கிறேன் இப்படிப்பட்ட ஆண்களை எந்த ஒரு பெண்ணும் ஏறெடுத்து கூட பார்க்கமாட்டாள்.
முந்தைய பதிவில் சொன்னது போல் ஒரு பாலியலை தொழிலாக செய்து தன் வாழ்க்கை நடத்தும் ஒரு தாசி போன்ற பெண்ணை கூட நல்ல விதமாக சித்திரித்து அவர்களுக்கு என்று ஒரு மனம், காதல், ஆசைகள், உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாம் சொல்லி ஒரு கதையை எழுதினால் நிச்சயம் எந்த ஒரு பெண்ணும் உங்களை ரசிப்பார்கள். மற்ற பெண்களை பற்றி எனக்கு தெரியாது. நான் நிச்சயம் ரசிப்பேன்.
ஆனால் இந்த தளத்தில் சிலர் தான் எழுதும் கதைகளில் தன்னுடைய குடும்பத்து பெண்களின் கதாபாத்திரங்களை வெறும் காம உணர்வுக்காக தாசியை விட கேவலமாக சித்தரித்து எழுதுகிறார்கள். அந்த கதை எழுதும் போது அந்த நபர் தான் குடும்ப பெண்களை பற்றி சிந்தித்து இருப்பாரா என்று தெரியவில்லை. அப்படி சிந்தித்து இருந்தால் இது போன்று கேவலமான ஒரு கதை எந்த ஒரு ஆண் எழுதமாட்டான்.
இப்படிப்பட்ட நபர்களுக்கு பெண்கள் ஒரு போக பொருள். அவர்களின் காம போதைக்கு பெண்கள் ஊறுகாயாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ரகம். காமத்தில் ஒவ்வொரு ஆணின் பார்வை பெண்களின் மீது எப்படி இருக்கிறது என்பது முக்கியமான விஷயம்.
அவர்களின் பார்வை பொறுத்தே பெண்கள் அவர்களை அணுகுவாள்.. இந்த உண்மை புரியவில்லை என்றாலும் உங்களால் எந்த ஒரு முன் பின் தெரியாத பெண்ணை நிஜ வாழ்க்கையில் கூட அணுக முடியாது.
இன்றைய கால கட்டத்தில் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் அனைவரும் இந்த தளத்தில் கதை படிக்க ஆரம்பித்துவிட்டனர். மற்ற பெண்களின் மனநிலைமை பற்றி எனக்கு தெரியாது. அதை அறியும் சக்தியும் ஆற்றலும் இல்லை.
இந்த தளத்தில் இதுவரை கதை எழுதிய ஆண்கள் பெண்களிடம் தனிபட்ட முறையில் பேசியது இல்லை. ஏன் கருத்துகளை கூட சொன்னது இல்லை. கருத்துக்கள் கூட சில மாதங்களுக்கு முன்பு இருந்து தான் என் மனதுக்கு பிடித்த சில பகுதிக்கு கருத்துகளை சொல்கிறேன்.
இந்த தளத்தில் மற்ற பெண்கள் எப்படி கதையை அணுகுகிறார்கள். அதை எப்படி படிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் படிக்கும் போது உணர்த்தை வைத்து தான் என் அனுபவத்தை சொல்கிறேன். கதை படிக்கும் போது அந்த ஆண் ஒரு பெண்ணை அணுகுகிறான் என்பதை பார்ப்பேன்.
அவளுக்கு அவன் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறான், அவனுடைய பார்வை அந்த பெண்ணின் மீது எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பேன். கதை படிக்கும் போது அந்த பெண் கதாபாத்திரத்தில் என்னை பொறுத்தி பார்ப்பேன். ஆண் அந்த பெண்ணை அனுபவிப்பதை என்னை அனுபவிப்பதை போல் நினைத்து கொள்வேன்.
கதை படிக்கும் போது ஒரு சுகமான உணர்வு வர வேண்டுமே தவிர, எரிச்சல் வர கூடாது. கதை படிக்கும் போது இயற்கையாகவே உணர்ச்சிகள் தூண்டபட வேண்டும். அதற்கு மிக முக்கியமான ஒன்று அந்த கதையின் போக்கு. ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நடக்கும் உரையாடல்கள் சம்பவங்கள் எல்லாம் தான் மற்றும் நிஜ வாழ்க்கையோடு ஒத்து போய் இருக்க வேண்டும். பேன்டஸி கதைகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
என்னுடைய சென்ற பகுதியில் நான் ரசித்த ஒரு கதை தொடரிலிருந்து ஒரு சிறு பகுதியை சொன்னேன். ஆனால் இந்த பகுதியில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை பற்றி கொஞ்சம் தெளிவாக விரிவாக சொல்லாம என்று நினைக்கிறேன்.
ஒரு கதையை நான் எப்படி பார்க்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். மற்ற பெண்கள் என்னை போல தான் பார்ப்பார்களா என்று கேள்வி எழ கூடாது. ஒவ்வொரு பெண்ணின் மனநிலை கதை படிக்கும் போது ஒன்றாக இருக்காது. வயது மற்றும் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்…
கருத்து எழுதுங்கள்