சுபாவின் உதடுகள் என் உதடுகளை நெருங்கிக் கொண்டு இருப்பதை என்னால் உணர முடிந்தது. அளவில்லா மகிழ்ச்சி மனதில் தோன்றினாலும் சிறு சலனமும் எட்டிப் பார்த்தது. காமம், காதல், ஆசை என அனைத்தும் என்னுள் இருந்தாலும் அதனூடாக இருந்த வெட்கமும் இது பொது இடம் என்ற உணர்வும், ஒரு வினாடி இடைவெளியில் கிடைக்க இருந்த முத்தத்திடம் இருந்து என்னை விரட்டியது.
நான் பின்வாங்குவதை பார்த்து முதலில் குழம்பிய சுபா, பின்னர் என் வெட்கம் கண்டு புன்னகை பூத்தாள். அதேநேரம் பெரும் சப்தத்துடன் அவள் ஏறிச் செல்ல வேண்டிய ரயில் நடைமேடையில் நுழைந்து கொண்டு இருந்தது. சுபா என்னையும் ரயிலையும் சில முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள்.
சுபா எழுந்தவுடன் நானும் அவளுடன் எழுந்து நிற்க, சுபா என் கையை பிடித்துக் கொண்டு “தேன்க்ஸ் டா” என்று கூறிவிட்டு பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியை நோக்கி நடந்தாள். நான் சுபாவின் கைகளை விடாமல் அவளுடனே நடந்து சென்றேன். சுபா ரயில் பெட்டியின் வாசலில் நிற்க நான் அவள் கையை பிடித்துக் கொண்டு நடைமேடையில் நின்றேன்.
சுபா : டிரெய்ன் கிளம்ப போகுது.
நான் : தெரியும்.
சுபா : (சிறிது மௌனத்திற்கு பிறகு) டிரெய்ன் கிளம்ப போகுது டா.
ரயில் மெதுவாக நகர துவங்க, நான் பிரிய மனமின்றி சுபாவின் கையை விட, சுபா கை நீட்டியபடியே வாசலில் நின்றாள். ரயிலுடன் சேர்ந்து நானும் நகர சிறிது நேரத்தில் நேரத்தில் ரயில் நடைமேடை தாண்டி என் கண்களில் இருந்து மறைந்தது. சுபா மட்டுமே என் நினைவில் நிற்க, நான் தன்னிச்சையாக நடந்து கொண்டு இருந்தேன். சூரியன் முழுவதும் மறைந்து இருள் சூழ்ந்து கொண்டு இருக்க, நான் பைக்கில் தனியாக பயணித்துக் கொண்டு இருந்தேன். “எம்புட்டு இருக்குது ஆச, உன் மேல அத காட்ட போறேன்” என்ற பாடல் கேட்டதும் எனக்குள் மகிழ்ச்சி தோன்றியது. ஆம் சுபா தான் அழைக்கிறாள், அவசர அவசரமாக வண்டியை நிறுத்தி போனை எடுத்தேன். அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, எனக்கு தான் சரியாக கேட்கவில்லை என நினைத்து ஹெட்செட் மாட்டி ஹலோ என்றேன். சுபாவும் ஹலோ என்றாள்.
நான் : சீட் கிடைச்சுதா சுபா, கம்ப்படபுள் தான.
சுபா : இங்க எல்லாம் ஓக்கே தான், நீ பைன் தான.
நான் : எனக்கு என்ன, ஐம் ஆல் ரைட். பைக்ல தான் போயிட்டு இருக்கேன். 8.30 இல்ல 9.00 க்கு வீட்டுக்கு போய்டுவேன்.
சுபா : சரி பத்திரமா போ, வேற எதுவும் இல்லையே.
நான் : வேற……… நத்திங் சுபா.
சுபா : ம்ம்ம்…… எல்லாம் நான் பாத்தாச்சு.
நான் : எ….ன்…..ன…. பாத்திங்க…….
சுபா : உன்ன தான் பாத்தேன். ரயில் கிளம்பும் போது உன் கண்ணுல தெரிஞ்ச லவ்வ பார்த்தேன்.
நான் : அது………. இல்ல சுபா……
சுபா : எனக்கு எல்லாம் தெரியும் டா. நீ பழகுற பஸ்ட் பொண்ணு நான் தான.
நான் : எஸ்.
சுபா : பாத்தாலே தெரியுது, உள்ள நிறைய ஆசை இருந்தாலும் நீ கட்டுப்பாட்டோட தான் இருக்குற. கிராமத்து பசங்களுக்கான வெட்கம், கூச்சம் எல்லாம் உன்ட பார்த்தேன். பட்……
நான் : பட்……
சுபா : இதுக்கு முன்னாடி நமக்குள்ள சில விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனா எனக்கு பசங்க, ஹஸ்பண்ட் இருக்காங்க. அதுவும் இல்லாம நீ என்னைவிட பத்து வயசு சின்ன பய்யன். சோ…….
நான் : அதனால என்ன சுபா, நாம ப்ரெண்ட்ஸா இருக்க முடியாதுன்னு சொல்றிங்களா.
கருத்து எழுதுங்கள்